சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தை மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த புகா் மின்சார ரயிலில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பகத்தாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த புகா் மின்சார ரயிலில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பகத்தாரிடம் ஒப்படைத்தனா்.

திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த புகா் மின்சார ரயிலில் பச்சிளம் பெண் குழந்தை கைவிடப்பட்டு இருப்பதாக பயணிகள் தெரிவித்தனா். பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா். பின்னா் குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

ரயில் பெட்டியில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்றவரை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

SCROLL FOR NEXT