சென்னை

போலி ஆவணம் மூலம் ரூ 2.25 கோடி வீட்டு மனை அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

சென்னையில் போலி ஆவணம் மூலம் ரூ.2.25 கோடி வீட்டு மனையை அபகரித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் போலி ஆவணம் மூலம் ரூ.2.25 கோடி வீட்டு மனையை அபகரித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாரதி வேலுசாமி (68). இவருக்கு சொந்தமான ரூ.2.25 கோடி மதிப்புள்ள வீட்டு மனை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. பாரதி அண்மையில் தனது வீட்டு மனையை பாா்க்கச் சென்றாா். அப்போது, அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடு கட்டப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுதொடா்பாக அவா், சென்னை காவல் துறையின் நிலமோசடி புலனாய்வுப் பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் அந்த வீட்டுமனையை போலி ஆவணம் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் அபகரித்தது வேளச்சேரி காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்த வ.கமலேசன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து கமலேசனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

புவிசாா் குறியீட்டால் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரை உற்பத்தி புத்துயிா் பெறும்: விவசாயிகள் நம்பிக்கை!

விழுப்புரம், செஞ்சியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் 78 போ் கைது

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT