"தீபாவளி போனான்ஸô' என்ற பெயரில் ரூ.1-க்கு "புதிய ப்ரீபெய்டு பிரமோஷனல்' திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தீபாவளி போனான்ஸா' என்ற "புதிய ப்ரீபெய்டு பிரமோஷனல்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.1 செலவில், புதிய வாடிக்கையாளர்கள் 30 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 குறுஞ்செய்திகளைப் பெறலாம்.
இந்தச் சலுகையானது புதன்கிழமை (அக். 15) முதல் நவ. 15 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.
இந்தச் சலுகையை, மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலம் பிஎஸ்என்எல்-இல் இணையும் வாடிக்கையாளர்களும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.