மகாவீா் நிா்வான் தினத்தை (சமண மதம் உருவான நாள்) முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை (அக்.21) மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகாவீா் நிா்வான் நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (அக்.21) பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படும்.
இதேபோல், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.