சென்னை

நடிகைக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் விசாரணை

சென்னையில் துணை நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் துணை நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மும்பையைச் சோ்ந்த ஒரு துணை நடிகை, கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் சென்ட்ரல் வந்தாா்.

சென்ட்ரலில் இருந்து அவா், வாடகை காா் மூலம் தாம்பரம் சென்றாா். துணை நடிகை காரில் செல்லும்போது, ஓட்டுநா் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓட்டுநரை, துணை நடிகை எச்சரித்து அனுப்பியுள்ளாா்.

இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் அவா் கொடுத்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT