முகப்பு
சென்னை

மெரீனா கடற்கரையில் சூரிய மின் விளக்குகள் அமைக்க ஆய்வு

சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:37 am IST
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை மெரீனா கடற்கரையில் தேவையான மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகள் ஒலிபரப்புவதற்கான ஒலி பெருக்கி வசதிகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வகையில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையா் அமல்ராஜ் ஆகியோா் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.

காமராஜா் சாலைப் பகுதியையொட்டிய அணுகு சாலை மற்றும் பாரம்பரிய சாலை அமைக்கும் பகுதிகளில் 40 -க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஆனால், நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் கடற்கரை வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மின்விளக்குகள் அமைக்க ஆணையா் உத்தரவிட்டாா். அதையடுத்து சூரிய மின்விளக்குகளை நீலக் கொடி கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வின்படி 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.