84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 84 பேரை கைது செய்த போலீஸாா், 5.25 கிலோ கஞ்சா, 2.6 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், சென்னை நகரில் பெண்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள்கள் விற்போா், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபா்களை கண்காணித்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
அந்த வகையில், சென்னை நகரில் மட்டும் கடந்த சில நாள்களில் 45 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 84 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 5.25 கிலோ கஞ்சா, 3.5 கிராம் மெத்தபெட்டமைன், 115 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2.6 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.