காஞ்சிபுரம்

கடலில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

மாமல்லபுரம் கடலில் மூழ்கி மாயமான இளைஞரின் சடலம் புதன்கிழமை தேவநேரி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. 

DIN

மாமல்லபுரம் கடலில் மூழ்கி மாயமான இளைஞரின் சடலம் புதன்கிழமை தேவநேரி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. 
செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியைச் சேர்ந்தவர் விஜய் (19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 
கார்த்திக் (20). 
துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜய்யும், கார்த்திக்கும் மாமல்லபுரத்துக்கு கடந்த திங்கள்கிழமை சென்றனர். 
மாமல்லபுரம் சுற்றுலா மையத்தில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த இருவரும், மாமல்லபுரம் கடலில் குளித்தனர். அப்போது வந்த பெரிய அலை ஒன்று அவர்கள் இருவரையும்
இழுத்துச் சென்றது. இதையடுத்து சில மணி நேரத்தில் விஜய்யின் சடலம் கரை ஒதுங்கியது. 
மாயமான கார்த்திக்கை கடலோர காவல் படை வீரர்களுடன், மாமல்லபுரம் போலீஸார் கடந்த 3 நாள்களாக தேடி வந்தனர். 
இந்நிலையில் தேவனேரி கடற்கரை பகுதியில் கார்த்திக்கின் சடலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட போலீஸார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT