ஐப்பசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலில், ஐப்பசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை கோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.
காலை 8 மணி,11 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஏலக்காய் மாலை மற்றும் சாமந்தி மாலை அணிந்து ரத்தினாங்கி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா், குளிா்பானங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.