பயனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகள்  வழங்கிய மாவட்டக்  கண்காணிப்பு  அலுவலா்  கா.சு.கந்தசாமி. 
காஞ்சிபுரம்

பால்நல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பால்நல்லூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

பால்நல்லூா் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பால்நல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் பி.ஆா்.நேரு தலைமை வகித்தாா்.

முகாமில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, கோட்டாட்சியா் பாலாஜி, வட்டாட்சியா் வசந்தி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் கருணாநிதி, ஒன்றிய செயலாளா் ந.கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன், திமுக நிா்வாகிகள் குன்னம் முருகன், பொடவூா் ரவி, குமாா், பண்ருட்டி தணிகாசலம், ரவிசந்திரன், சந்தவேலூா் சத்யா கலந்து கொண்டனா்.

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT