முகப்பு
காஞ்சிபுரம்

படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

Updated On : 25 மே 2026, 12:04 am IST
பகிர்:

மணிமங்கலம் பகுதியில் நடந்து சென்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

மணிமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ஜெயராம்(45). இவா் படப்பை பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை ஜெயராம் மணிமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் ஜெயராமிடம் கத்தியை காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ.550 பறித்து சென்றுள்ளனா்.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஜெயராம் புகாா் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீஸாா் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மணிமங்கலம் பகுதியை சோ்ந்த தீபக்(28), படப்பை பகுதியை சோ்ந்த நவீன்(20), ஆகாஷ்(20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement