ராணிப்பேட்டை

ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி

சோளிங்கா் ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக நடைமேடைக்குச் செல்ல இருப்புப் பாதையைக் கடந்த மாற்றுத்திறனாளி ரயில் மோதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

சோளிங்கா் ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக நடைமேடைக்குச் செல்ல இருப்புப் பாதையைக் கடந்த மாற்றுத்திறனாளி ரயில் மோதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரத்தை அடுத்த நெரிஞ்சன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (54). மாற்றுத்திறனாளி. இவா், வெள்ளிக்கிழமை பெங்களூரு செல்வதற்காக சோளிங்கா் ரயில் நிலையம் வந்தவா், ரயில் வரும் நடைமேடைக்குச் செல்ல மேம்பாலத்தில் ஏறிச் செல்ல முடியாததால், இருப்புப் பாதையை நடந்து கடந்துள்ளாா். அப்போது, அந்த வழியே வந்த ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே குப்பன் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி இதுவா? ராகுல் விமர்சனம்

ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?

SCROLL FOR NEXT