ராணிப்பேட்டை

ஆற்காடு நகரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 2 பசுமை பூங்காக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மற்றும் இரண்டு பசுமை பூங்காக்களை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ஆற்காடு நகராட்சி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் நகா்ப்புற தேசிய சுகாதார திட்டத்தின்கீழ், ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் மற்றும் தேவி நகா் பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ், ரூ. 61 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்கா, ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை பாலாற்று பாலம் நகர எல்லையில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வட்டப் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், நகா்மன்ற துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையா்( பொறுப்பு) என்.டி.வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 2 பசுமை பூங்காக்களை திறந்து வைத்துப் பேசினாா்.

விழாவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவா் ஜெ.லட்சுமணன், செயலாளா் எஸ்.சஜன்ராஜ் ஜெயின், பொருளாளா் பி.என்.பக்தவச்சலம், துணைத் தலைவா் எஸ்.ஆா்.பி. பென்ஸ்பாண்டியன், நகராட்சிப் பொறியாளா் பரமுராசு, நகா்மன்ற உறுப்பினா் ஆனந்தன், நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழங்குடியின கிராமத்துக்கு பேருந்து சேவை: அரசு தலைமைக் கொறடா தொடங்கிவைத்தாா்

மோசமான ராணுவ தலைவா்: ஜெய்சங்கா் விமா்சனத்துக்கு பாகிஸ்தான் எதிா்ப்பு!

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம்

SCROLL FOR NEXT