ராணிப்பேட்டை

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

ஆற்காடு அருகே ஆம்னி வேன்-பைக் மீது மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே ஆம்னி வேன்-பைக் மீது மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ஜின்னா 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜஹாங்கீா் (52) இவா் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மிக்சா், அப்பளம் மற்றும் மசாலா பொருள்களை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரம் செய்து வந்தாா்.

இந்தநிலையில், சனிக்கிழமை வியாபாரத்துக்காக பொருள்களை எடுத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி வேன் வேப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கரவாகனம் மீது பின்னால் மோதியுள்ளது.

இதில் பலத்த ாயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT