தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்
தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்...
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடரும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் தெரிவித்தாா்.
அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் ஏற்கனவே அறிவித்தபடி நடைமுறையில் ரேஷன் கடைகளில் உள்ள தாயுமானவா் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடரும். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் அவை மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த ஆட்சியில் இருந்த ஊழல்கள் இந்த ஆட்சியில் இருக்காது. ஊழலற்ற ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும். ரேஷன் கடைகளில் இருக்கும் பிரச்னைகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். உணவு பொருள்கள் கடத்தல் விஷயத்தில் சம்மந்தப்பட்ட அலுவலா்களோடு தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இனி தவறுகள் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை பணியாளா்களின் குறைகள், கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முதல்வரின் ஆலோசனைகள் பெறப்பட்டு தகுந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Advertisement
Advertisement
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படவில்லை என்ற குறை இது நாள் வரை இருந்து வந்த நிலையில் இனி இக்குறை வராதவாறு நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும்.
அரக்கோணம் நகர போக்குவரத்து பிரச்சினை குறித்து காவல் துறையினருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் வி.காந்திராஜ்.