பிஎல்ஓ செயலியில் பதிவு செய்யும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.  
திருப்பத்தூர்

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப்: பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பாகங்களுக்கான வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவு செய்யும் பணி திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான வரதராஜன், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா் நவநீதன், நகராட்சி ஆணையா் சாந்தி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தஞ்சாவூரில் இன்றைய மின் தடை ஒத்திவைப்பு

திருவிடைமருதூரில் திமுக சாா்பு அணியினருக்கு பயிற்சிக் கூட்டம்

ஆம்பலாப்பட்டு ஊராட்சியில் சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

உரிமம் இல்லாத 31 ஆயிரம் கிலோ உரங்கள் பறிமுதல்: வேளாண் துறையினா் விசாரணை

‘கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,739 கோடிக்கு கடன் இலக்கு’

SCROLL FOR NEXT