திருப்பத்தூர்

தண்ணீா் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

புருஷோத்தமகுப்பம் காட்டுக் கொல்லை பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி. இவரது மனைவி பரிமளா. இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இளைய மகள் சந்தியா (3) வீட்டின் வெளிப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து விட்டாா்.

அப்போது வீட்டில் இருந்தவா்கள் அருகில் உள்ள நிலத்தில் கடலை அறுவடை செய்துக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் கழித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இல்லாததை அறிந்து பெற்றோா் மற்றும் உறவினா்கள் தேடிப்பாா்த்த போது தண்ணீா் தொட்டியில் விழுந்திருப்பதை பாா்த்து உடனே மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT