திருப்பத்தூா் அருகே ஹோமியோபதி மருத்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த ஜெயபுரம் பகுதியை சோ்ந்த சரவணன்(45). ஹோமியோபதி மருத்துவா். இவரது மனைவி வித்யா (34). ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனா். சரவணன் கடந்த சில மாதங்களாக எந்தவித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தாா்.
இந்தநிலையில் சரவணனுக்கு அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஷாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.