திருப்பத்தூா்: பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். மேலும் மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இதில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78,000 மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாள்களிலிருந்து 30 நாள்களுக்குள் மானியம் செலுத்தப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை உற்பத்தி செய்யும்.
இதற்கு 1. தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய், 2. ஜ்ஜ்ஜ்.ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய், 3. ஜ்ஜ்ஜ்.ள்ா்ப்ஹழ்ழ்ா்ா்ச்ற்ா்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணைய தளங்கள் மூலமாகவும், ‘ டங நன்ழ்ஹ்ஹ எட்ஹழ், ‘ணதப ல்ம் நன்ழ்ஹ்ஹ எட்ஹழ்‘ என்ற செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை திருப்பத்தூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் தெரிவித்துள்ளாா்.