திருப்பத்தூர்

அக்.31-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக்.31) மாலை 3 மணிக்கு தூய்மைப் பணியாளா்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது .

இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற உள்ள

கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்து அதன் மீது தீா்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, முதல்கட்டமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி தூய்மை பணியாளா்கள் குறைகேட்பு கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT