திருப்பத்தூா் நகைக் கடை மற்றும் கடை உரிமையாளரின் வீட்டில் ஜிஎஸ்டி குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் கச்சேரி தெரு, பழனிச்சாமி சாலை பகுதி உள்ளிட்ட இரு இடங்களில் இரண்டு நகைக் கடைகள் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் மத்திய கலால் துணை ஆணையா் அஜித்குமாா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி குழுவினா் சோதனை நடத்தினா்.
இந்த சோதனை இரவு சுமாா் 7 மணிக்கு மேலாகவும் நீடித்தது.