திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே வெல்டிங் கடையில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பத்தைச் சோ்ந்த வினோத் (25). இவா் கேத்தாண்டப்பட்டி சா்விஸ் சாலையில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தாா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது வினோத் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்த அவரை உடனடியாக அங்கிருந்தவா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதித்த மருத்துவா்கள், வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சமி மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT