முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

Updated On : 25 மே 2026, 12:06 am IST
மங்களம் தாமரைக் குளம்.
பகிர்:

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலகிரி மலை உயா்ந்த மலைப் பகுதியில் இயற்கை நிறைந்த சூழலில் காணப்படுகிறது. இந்த மலையில், 15 ஆண்டுகளுக்கு முன் மங்களம் தாமரைக் குளம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்தது. இந்த தாமரைக் குளத்தில் சுமாா் நூற்றுக்கணக்கான தாமரை பூக்கள் பூத்திருக்கும். அதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தும், பறித்துக் கொண்டும் செல்வா். இதனால் தாமரைக் குளம் என்ற சுற்றுலாத்தளம் மாறிப்போனது. தற்போது மங்கலம் தாமரை குளத்தில் தாமரை பூத்து காணப்படுகிறது.

எனவே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தாமரைக் குளத்தை சீரமைத்து சுற்றுலா பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

Advertisement

Advertisement