திருவள்ளூர்

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

திருத்தணி அருகே உள்ள கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருத்தணி அருகே உள்ள கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம், நோட்டுகள், சீருடைகள், புத்தக பை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் திருத்தணி அருகே உள்ள கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசேகர், பேரணியை தொடங்கி வைத்தார். இதில், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தலைமை ஆசிரியர் பழனிசேகர், ஆசிரியர்கள் நேரடியாக சென்று, துண்டுப் பிரசுரங்களை வழங்கி, மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.
இதேபோல் பள்ளிப்பட்டு வட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் கருணாகரன் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடபுத்தகம், கல்வி உபகரணங்களை முறையாக வழங்கப்படுகின்றனவா என தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, மாணவிகள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகித்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியை தெமினா கிரேனாப், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள் எம்.சுரேஷ், பொருளாளர் குமரவேல், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜெயசந்திரன், நாகராஜ், ஆசிரியர்கள் சுப்பிரமணியம், ராதைய்யா, சேஷாசலம், சக்கரபாணி உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT