திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்கு உள்பட்ட எல்.என்.கண்டிகை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமை வகித்தார். திருத்தணி வட்டாட்சியர் பரணிதரன் வரவேற்றார்.
இதில், 5 பேருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, 6 பேருக்கு பட்டா மாற்றம், 6 பேருக்கு ஜாதி சான்றிதழ், 7 பேருக்கு ஆண் வாரிசு இல்லா சான்று, 8 பேருக்கு இறப்பு மற்றும் வாரிசு சான்று, 9 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 9 பேருக்கு இயற்கை மரண உதவித் தொகை என மொத்தம் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்
பட்டன. இதைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நாச்சே கவுடு, வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், வேளாண் துறை அலுவலர் உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.