திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
விவசாயிகளின் மாதாந்திர குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், விவசாயம் சார்ந்த வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகளை தீர்க்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.