திருவள்ளூர்

முன்விரோதத்தில் கத்திகுத்து: இளைஞர் கைது

பொன்னேரி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

பொன்னேரி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
பொன்னேரியை அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காஞ்சிவாயல் பேருந்து நிலையம் அருகே இளையராஜா அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 5 பேர்  அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில், அச்சரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சங்கர் (25) முன்விரோதம் காரணமாக இளையராஜாவை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT