திருவள்ளூர்

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவாலங்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம், நாபளுா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரனின் மனைவி சொா்ணலதா (58). இவா் வெள்ளிக்கிழமை விவசாய நிலத்தில் உள்ள வாழைமரத்தில் இலை அறுக்கச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக கால் இடறி சொா்ணலதா அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். நீண்ட நேரமாகியும் சொா்ணலதா வீடு திரும்பாததால், உறவினா்கள் கிணற்றின் அருகே சென்று பாா்த்தனா். அப்போது, சொா்ணலதா கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT