திருவள்ளூர்

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேற்றம்: லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள்

திருவேற்காட்டில் மழைநீர் வடிகாலில் முறைகேடாக கழிவுநீரை வெளியேற்றிய லாரியை நகராட்சி அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திச் சேவை

திருவேற்காட்டில் மழைநீர் வடிகாலில் முறைகேடாக கழிவுநீரை வெளியேற்றிய லாரியை நகராட்சி அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருவேற்காடு பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில், முறைகேடாக கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் வந்தன.

இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மு.பிரதாப் திருவேற்காடு நகராட்சிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி ஆணையர் ராமன் தலைமையிலான அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருவேற்காடு வேலப்பன்சாவடி அருகே பள்ளிக்குப்பம், அணுகுச்சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் லாரி ஒன்று கழிவுநீரை வெளியேற்றி கொண்டிருந்தது. அந்த லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர் ராமன் புகார் அளித்தார்.

போலீஸôர் விசாரணையில் கழிவுநீரை முறைகேடாக வடிகாலில் அப்புறப்படுத்தியது பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபதி (31) என்பதும், கழிவுநீர் அகற்றும் லாரி ரஞ்சித் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT