திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 84,575 பக்தா்கள் தரிசித்தனா். 36,771 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 84, 575 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 36,771 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.70 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.