திருவண்ணாமலை

பேருந்தில் இருந்து விழுந்த கார் ஓட்டுநர் சாவு

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தில் இருந்து விழுந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

DIN

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தில் இருந்து விழுந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் முருகன் (51). இவர், கடந்த 6-ஆம் தேதி திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, ரயில்வே கேட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தாராம்.
அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக முருகன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT