திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக பி.ரத்தினசாமி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்தவர் சா.பழனி. இவர், சென்னை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநராக இருந்த பி.ரத்தினசாமி, திருவணணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவர், மாவட்ட வருவாய் அலுவலராக புதன்கிழமை பொறுப்பேற்றார். இவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.