திருவண்ணாமலை

ஆலத்தூரில் மனுநீதி நாள் முகாம்

செய்யாறை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

DIN

செய்யாறை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
செய்யாறு வட்டம், ஆலத்தூர், பையூர் உள்ளிட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பானு தலைமை வகித்தார். வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்பட 86 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதே போன்று, வேளாண் துறை சார்பில் 12 விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.முரளி, துறை அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT