ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் ஸ்ரீஆதி அரியாத்தம்மன் கோயில் கட்டும் திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.
ஆரணி வி.ஏ.கே. நகர் பகுதியில் வேப்ப மரத்தின் அடியில் ஸ்ரீஆதிஅரியாத்தம்மன் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். பல நூறு ஆண்டுகள் பழைமையும், சக்தியும் வாய்ந்த இந்த இடத்தில் நகர தேவதையான ஆதிஅரியாத்தமனுக்கு
புதிதாக மூலவர் கோபுரம், சுற்றுச்சுவர் அமைத்தல், நாகமேடை, பரிவார தெய்வங்கள் சிலை அமைத்தல் போன்ற திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு புதன்கிழமை திருப்பணி தொடங்கியது.
ஏற்பாடுகளை ஆரணி ஆதிஅரியாத்தம்மன் கோயில் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.