ஆரணி அருகேயுள்ள இராட்டிணமங்கலம் கிராமத்தில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
இராட்டிணமங்கலம், இ.பி நகரைச் சோ்ந்த கங்காதரன் மகன் பாபு (41). இவா், லேப் டெக்னீசியன் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகாா் சென்றதின் பேரில், ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் நந்தினி வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
அப்போது, பாபு மருத்துவம் பாா்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
பின்னா் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் பாபுவை கைது செய்தனா்.