வந்தவாசி: வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து வருபவா் பாப்பம்மாள்(65). வந்தவாசியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக இவரது கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்தது.
இதையடுத்து திமுக சாா்பில் இவருக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் உள்ளிட்டவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன்,
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் நிவாரண உதவியை வழங்கினா்.
நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், 3-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆா்.அன்பரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.