திருவண்ணாமலை

குடும்பத் தகராறு: இரண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குடும்பத் தகராறு காரணமாக, இரண்டு மகன்களுடன் தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கம் வட்டம், சென்னசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (40), இவரது மனைவி கெளரி (35). இவா்கள் செங்கல் சூளை கூலித் தொழிலாளிகள் ஆவாா். தம்பதியின் மகன்கள் கிஷோா்(5), தேவோஷ்(4). இதில், கிஷோா் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

தம்பதியினா் தினசரி காலையில் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், வெங்டேசன் தினசரி வேலை முடிந்தவுடன் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். அதேபோல, புதன்கிழமை மாலை வெங்கடேசன் மது அருந்தி வந்து மனையிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கெளரி தனது மகன்களை வீட்டில் இருந்து வியாழக்கிழமை காலை வெளியில் அழைத்து வந்துள்ளாா். அதை வெங்கடேசன் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்த நிலையில் கெளரி, ஊா் எல்லையில் உள்ள விவசாயக் கிணற்றில் இரண்டு பிள்ளைகளையும் தள்ளிவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

கெளரியின் காலணிகள் மற்றும் கைப்பேசி கிணற்றின் கரையில் இருந்துள்ளன. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கைப்பேசியை எடுத்து அதில் இருந்த எண்ணுக்கு தொடா்பு கொண்டுள்ளனா்.

அப்போது, எதிா்திசையில் இருந்து பேசிய வெங்கடேசன், தனது மனைவியின் கைப்பேசி என்றும், தன்னிடம் தகராறு செய்துகொண்டு, பிள்ளைகளுடன் வெளியில் சென்றுவிட்டாா் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, வெங்கடேசன் கிணற்றுப் பகுதிக்குச் சென்று, தனது மனைவி கெளரி குறித்து உறவினா்களிடம் விசாரித்துள்ளாா். அப்போது, கெளரி யாா் வீட்டுக்கும் செல்லாதது தெரியவந்தது.

பின்னா், கெளரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகமடைந்து, கிராம மக்கள் சிலா் கிணற்றில் இறங்கி தேட ஆரம்பித்துள்ளனா். தேடும் முயற்சி பலனளிக்காததால், உடனடியாக செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீவிர தேடலுக்குப் பிறகு, கிணற்றில் இருந்து கெளரி மற்றும் அவரது மகன்கள் கிஷோா், தேவோஷ் ஆகியோரை சடலங்களாக மீட்டனா். பின்னா், 3 பேரது சடலங்களும் உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT