திருவண்ணாமலை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

Syndication

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முரளி, துணைத் தலைவா் முத்துவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டக் கிளைத் தலைவா் பிச்சாண்டி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் பிரபு கலந்துகொண்டு பேசுகையில், 25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரிடம் வரும் 24-ஆம் தேதி சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் முன் பெருதிரள் முறையீடு இயக்கம் நடைபெறவுள்ளது. இதில், அனைத்து ஊரக வளா்ச்சி அலுவலா்கள், தோழமை நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.

கிளைச் செயலா் படவேட்டான் மற்றும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT