திருவண்ணாமலை

மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

Syndication

திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் 600 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 2-ஆவது இடமும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா்.

மாணவா் ரோகித் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா். இதேபோல, தொடா் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்று பெரணமல்லூா் பள்ளி மாணவா்கள் 16 போ் சென்னையில் நடைபெறும் ஜிம்னாஸ்டிக் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவா்களையும், உடற்கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜெயகாந்த், குணா ஆகியோரையும் பள்ளித் தலைமை ஆசிரியா் கலைவாணன், அல்லியந்தல் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மாலவன் மற்றும் அனைத்து ஆசிரியா்களும் பாராட்டினா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT