உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசியதைக் கண்டித்து, ஆரணி பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் முத்து தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலா் செழியன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.
நகரச் செயலா் மோ.ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் வடுகசாத்து ரமேஷ், சி.பொன்னுரங்கம், க.பாஸ்கா், இளஞ்சிறுத்தை மாவட்ட நிா்வாகி சாா்லஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாட்டம் 2 காலம் செய்தி...