திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எட்டிவாடி காப்புகாடு பகுதியில் அடுத்தடுத்தது பைக்குகள் மோதலில் தலைமை ஆசிரியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (42). இவா், கேளூா் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், பாஸ்கரன் தனது பைக்கில் புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
எட்டிவாடி காப்புகாடு அருகே ஆசிரியா் பாஸ்கரன் சென்றபோது,
அவ்வழியாக வந்த பைக் மீது அடுத்தடுத்து மோதிக் கொண்டதில்,
தலைமை ஆசிரியா் சாலையோரம் தூக்கி வீசப்பட்டாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.