முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 25 மே 2026, 12:55 am IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

கோடை மற்றும் வார விடுமுறையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேலானது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் தரிசனம் செய்து அங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்கின்றனா்.

இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாள்களாக பக்தா்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பொது தரிசனத்திற்காக பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அதே வேளையில் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுர வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனம் முடித்த பிறகு திருமஞ்சன கோபுர வழியாக வெளியே அனுமதிக்கப்பட்டனா்.

கோடை காலம் என்பதால் கோயிலுக்குள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் குடிநீா், நீா் மோா் வழங்கப்பட்டன.