வாணியம்பாடியில் கன மழையின்போது மின்னல் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதிகளில் புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
அப்போது வாணியம்பாடியை அடுத்த துரிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (20) மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தார். தகவலறிந்த வாணியம்பாடி வட்டாட்சியர் முரளிகுமார் மற்றும் ஆலங்காயம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு சுரேஷின் சடலம் மீட்கப்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.