காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வாலாஜாபேட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எதிரே சாலைப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் த.ப.வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் எம்.பழனி வரவேற்றார். இதில், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காக மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சியிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 5000-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.