ஆற்காடு அரசுப் போக்குவரத்து பணிமனையில் மாடிப் படியிலிருந்து தவறி விழுந்து பேருந்து ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
ஆற்காடு சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர், வேலூர் கொணவட்டம் பணிமனையில் அரசுப் பேருந்து
ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆற்காடு பணிமனையில் நண்பர்களுடன் பேசிவிட்டு மாடிப் படியில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கணேசனை அருகே இருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.