பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகள் தொடக்கம்
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை நகராட்சி ஊழியர்கள் புதின்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை, செப்டிக் டேங்க், குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை சுகாதாரமின்றியும், பராமரிப்பின்றியும் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை, தினமணி நாளிதழில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
இதையடுத்து புதன்கிழமை நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராஜரத்தினம் கூறுகையில், விரைவில் செப்டிக் டேங்க் அகற்றப்பட்டு, புதிய செப்டிக் டேங்க் கட்டப்படும் என்றார்.