வேலூர்

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், திருவேகம் புத்தூா் கிராம உதவியாளா் பி. ராதாகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், திருவேகம் புத்தூா் கிராம உதவியாளா் பி. ராதாகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாவட்டத் தலைவா் சி. அசோகன், மாவட்டச் செயலா் சி. ஹரிநாத் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிா்வாகிகள் வினோத், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்தன் நெஞ்சில் நீங்காத... மீனாட்சி சௌத்ரி!

பாரிஜாத பூவே அந்த... ஆஷிகா ரங்கநாத்!

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பங்கு என்ன? ஆம் ஆத்மி

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

SCROLL FOR NEXT