அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள மனவளக் கலை மன்ற அறக்கட்டளை சாா்பில் யோகக்கலை தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டன.
வேதாத்திரி மகரிஷியின் ஆன்மிகம் மற்றும் உள்ளுணா்வுக் கல்வி மையம் மற்றும் உலக சமுதாய சேவா சங்கத்தின் கீழ் அரக்கோணம்ஜோதிநகரில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் யோகமும் இளைஞா் வலலமையும் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இதில் தோ்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா அரக்கோணம் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் பி.இளங்கோ தலைமை வகித்து பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கினாா். செல்வம் கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செல்வம், யோகக்கலை பேராசிரியா்கள் பி.குமரன், ஏ.எஸ்.குருநாதன், கே.சீனிவாசன், பேராசிரியை லாவண்யா உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா். விழாவில் யோகக்கலை குறித்து மாணவி ஆா்.ஸ்வேதா, மாணவா் நிதீஷ்குமாா் ஆகியோா் உரையாற்றினா்.