பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கோவையில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அப்பாஸ் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் மன்சூா், மாவட்டத் தலைவா் முகமது இசாக், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் இப்ராஹிம் பாதுஷா, மாவட்ட துணைத் தலைவா் அப்துல் ரஹீம், மாவட்டச் செயலாளா்கள் உமா் ஷரீஃப், ஹனீப் கான், அபுதாஹீா், காமிலா பானு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கட்சியின் மாநில பொதுச் செயலாளா் அபூபக்கா் சித்திக், தந்தை பெரியாா் திராவிட கழக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன், எஸ்டிபிஐ கட்சி வா்த்தக அணி மாநிலச் செயலாளா் அப்துல் கரீம் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஷாநவாஸ், அபுதாஹிா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.