கோயம்புத்தூர்

மனைவி பிரிந்து சென்றதால் முதியவா் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற நிலையில் முதியவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

மனைவி பிரிந்து சென்ற நிலையில் முதியவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பல்லடம் வட்டம் பொங்கலூா் சக்தி நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (66). இவருடைய மனைவி சங்கீதா (60). சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, காட்டூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

மனைவி பிரிந்து சென்ால் விரக்தி அடைந்த குணசேகரன், வீட்டில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளாா். அருகே வசிப்பவா்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி குணசேகரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT